உங்க பிரசன்னத்தில்
சிறகில்லாமல் பறக்கிறேன்
உங்க சமுகத்தில்
குறைவில்லாமல் வாழ்கிறேன்
என் தஞ்சமானீரே
என் கோட்டையானீரே
என் துருகமானீரே
என் நண்பனானீரே
உதவாத என்னையே
உருவாக்கும் உறவே
குறைவான என்னையே
நிறைவாக்கும் நிறைவே
பொய்யான வாழ்வையே
மெய்யாக மாற்றினீர்
மண்ணான என்னையே
உம் கண்கள் கண்டதே